நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா?
வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், புரத சத்தும் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற நல்ல உணவாகும். இதிலுள்ள சர்க்கரையின் அளவு மிக குறைவு.
இதில் இருக்கும் மெக்னீசியம், இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். எனவே நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் அவற்றை தைரியமாக சாப்பிடலாம்.
வேர்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும், சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது குறையும்.
வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம், உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும்.
இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற, உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாகாமல் தடுக்கும்.
வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால், சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது.
வேர்க்கடலை பருப்பில் உள்ள தோலை, நீக்காமல் சாப்பிட வேண்டும். அதில் நிறைய சத்துக்கள் உள்ளன.
வேர்க்கடலையைப் பச்சையாக சாப்பிடுவதைவிட, அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால், சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.