பிளஸ் 2க்கு பின்னர் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்!
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நிறைய நுழைவுத் தேர்வுகளை எழுத தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு கல்லுாரியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். அரசு சார்பில் நடத்தப்படும் கல்லுாரிக் கனவு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் துறைகளில் வெளிநாடுகளில் மேல்படிப்பு, பணிக்கு வாய்ப்பு உள்ளதா போன்றவை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதுதொடர்பான தொழில்நுட்பம் குறித்த தங்களது அறிவை மேம்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் ஜொலிக்கலாம்.
பொறியியல், மருத்துவம் தாண்டி எண்ணற்ற துறைகள் உள்ளன.
மெட்டலஜி, எர்த் சைன்ஸ் போன்ற துறைகளை குறைந்த மாணவர்களே தேர்ந்தெடுக்கின்றனர்.
லட்சங்களில் போட்டியிடுவதைவிட, ஆயிரங்களில் போட்டியிட்டு சிறப்பான இடங்களைப் பிடிக்கலாம் என்பது கல்வியாளர்களின் அட்வைஸாக உள்ளது.