தகிக்கும் வெயிலில் இருந்து பறவைகளை காக்க முன்வாருங்கள் !
கோடையில் வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
வெயில் காலத்தில் உடல் களைப்பு, உஷ்ணம் ஏற்படாமல் இருக்க தினமும் 5 லி., தண்ணீர் குடிக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
விலங்குகளை பொறுத்தவரையில் நாய்களுக்கு 2 லிட்டர்; காட்டுப்பறவைகள், 400 மி.லிட்டர் - முதல் 1லிட்டர்; வீட்டு பறவைகள், 300 முதல் 500 மி.லிட்டரும் தண்ணீர் பருகும் என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கோடைகாலத்தில் மனிதர்களை போல விலங்குகள், பறவைகளும் வெயிலால் அதிகம் களைப்படைகின்றன. அவை தண்ணீருக்காக அலைய வேண்டி உள்ளது.
எனவே, வீட்டு மொட்டை மாடி, தோட்டம், வீட்டு ஜன்னல் போன்ற இடங்களில் பறவைகளுக்காக சிறிது தண்ணீர் வைக்கலாம்.
தினமும் காலையோ, இரவோ அல்லது கிடைக்கும் நேரங்களில் தண்ணீரை மாற்றி விடுங்கள்.
பறவைகள், விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆங்காங்கே சிறு தொட்டிகள் அமைத்து, தண்ணீர் வைக்க முன்வர வேண்டும் என்பது பிராணிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.