சமையல் குறித்த சந்தேகங்களும், தீர்வுகளும்!
குழம்பு அல்லது கூட்டுக்கு தேங்காய்க்கு பதிலாக, கசகசாவை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து போட்டு இறக்கலாம்
பொரியலுக்கு பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொள்ளலாம்
போளி செய்யும் போது வெல்லம், தேங்காய் கலந்த பூரணத்தை நிரப்பி, மீண்டும் மூடும் போது, அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால், போளி மிருதுவாக இருக்கும்
வற்றல் குழம்பில் ஒன்றிரண்டு மேஜைக்கரண்டி அளவு புளிக்காய்ச்சலை எடுத்து கலந்து விட்டால், சுவையும், மணமும் அதிகரிக்கும்.
சப்பாத்தி மாவோடு கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி, பெருங்காயத்துாள், சீரகம் மற்றும் கறிவேப்பிலை கலந்து சுட்டால், சைடிஷ் இல்லாத சப்பாத்தி தயார்
கொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால், சில சமயம் ஒருவிதமான வாடை வரும்.
அதற்கு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்த பின், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடியும் கழுவி, தண்ணீரை மாற்ற வேண்டும்.