சமையல் ருசிக்க எளிய டிப்ஸ் இதோ...
அடை செய்யும் போது, காரத்திற்கு மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்தால், சுவையாக இருக்கும்; ஜீரண சக்தியும் அதிகரிக்கும்
பருப்பு வடை செய்யும் போது சிறிதளவு இஞ்சி துருவலை சேர்த்து செய்தால் வாயு பிரச்னை வராது. வடையின் சுவையும் கூடும்.
பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும் போது, பயத்தம் பருப்பை வாசனை வரும்படி நன்கு வறுத்து, செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்
கோதுமை ரவை உப்புமா செய்யும் போது, தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக, தேங்காய்ப் பால் கொஞ்சம் சேர்த்தால், ருசியாக இருக்கும்
தயிர் வடை செய்யும் போது, உளுத்தம் பருப்புடன் ஐந்து அல்லது ஆறு முந்திரி பருப்பையும் ஊற வைத்து, அரைத்தால், வடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
காளான் வறுவல் செய்யும் போது தண்ணீர் ஊற்ற தேவையில்லை, காளானில் உள்ள தண்ணீரே வேக வைக்க போதுமான அளவு இருக்கும்.
மிளகாய் தூளில் வண்டு வராமல் இருக்க, சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கலாம்.
புளி சாதம் செய்யும் போது நல்லெண்ணெய் பயன்படுத்தினால், அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்