கமகம உணவிற்கான கிச்சன் டிப்ஸ்..

எலுமிச்சை சாதம் தயாரிக்கும் போது, வேர்க்கடலையுடன் ஒரு கைப்பிடி அவித்த கடலை சுண்டலையும் சேர்த்து தாளித்து, சாதத்தில் கலந்தால், கூடுதல் சத்துடன் அருமையாக இருக்கும்

பருப்பு உசிலி செய்ய, பருப்பை நன்கு களைந்து நீரை வடித்து, இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

ஆறிய பின் அத்துடன் மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். பூப்போல சூப்பரான பருப்பு உசிலி நொடியில் தயார்

இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து வேகவிட்டு அரைத்து எடுத்து, மதியம் சாப்பிடும் போது, இரண்டு தேக்கரண்டி போட்டு, 40 நாட்கள் சாப்பிட, சர்க்கரை நோய் படிப்படியாக குறையும்

தேயிலை துாளுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால், தேநீர் தயாரிக்கும் பாத்திரத்தில் கறை படியாது.

இட்லி மாவில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கிண்டி, 10 நிமிடங்களுக்கு பின் இட்லி ஊற்றினால், இட்லி மெதுவாக வரும்.

தயிர் புளிக்கும் நிலைக்கு வரும்போது, அதில் ஒரு தேங்காய் துண்டை போட்டு வைத்தால் அதிகமாக புளிக்காது.

முட்டை வேக வைக்கும்போது அதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். இதனால், முட்டை தோலை எளிதில் உரித்து எடுக்கலாம்.