இன்று தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்

எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தி டிச.,14ல் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நவீன உலகில் எரிசக்தியே பிரதானமாக உள்ளது. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் எரிசக்தி மூலமே இயங்குகிறது.

இது புதுப்பிக்க இயலாதவை. நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம் என பல ஆற்றல் சக்திகளும் குறைந்து வருகின்றன.

இவை இன்று போலவே எதிர்காலத்திலும் கிடைக்கும் என கூற முடியாது.

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் எரிசக்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தேவைக்கு ஏற்ப உபயோகத்தை ஊக்குவிப்பதும், எதிர்கால தலைமுறைக்கு எரிசக்தியை பாதுகாப்பு கொடுப்பதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கம்.

எரிசக்தி சேமிப்பு என்பது சூற்றுச்சூழல் பாதுகாப்பு முதல் தொடங்கி பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.