உடம்புக்கு மட்டும்தான் பாடி லோஷன்... முகத்துக்கு நோ !

பனிக்காலம் வந்துவிட்டாலே போதும், நம் ஸ்கின் வறண்டு போக துவங்கிவிடும். உடனே நாம் கையில் எடுக்கும் ஒரே அஸ்திரம், பாடி லோஷன் தான்.

ஆனால், அந்த பாடி லோஷனை அப்படியே முகத்துக்கும் சேர்த்து பலரும் 'அப்ளை' செய்கின்றனர். இது முற்றிலும் தவறானது என்பது அழகுக்கலை நிபுணர்களின் அட்வைஸாகும்.

உடம்பிலுள்ள சருமத்தின் தன்மையும், முகத்திலுள்ள சருமத்தின் தன்மையும் வேறு. முக சருமம் மிக சென்சிட்டிவ். குறிப்பாக, மேல் உதடு போன்ற பகுதிகள் மிக மென்மையானவை.

தடிமனான தோலுள்ள, உடலுக்காக தயாரிக்கப்பட்ட லோஷனை, முகத்தில் பயன்படுத்தும்போது, அது அலர்ஜி ஏற்படுத்தவே வாய்ப்பு அதிகம்.

அதேபோல்தான் தேங்காய் எண்ணெயும். இதை சருமத்துக்கு பயன்படுத்துவது நல்லதுதான்.

ஆனால், சில சரும வகைகளுக்கு ஒத்துவராது. தொடர்ந்து பயன்படுத்தும்போது, கருமை நிறமாக (பிக்மென்டேஷன்) மாற வாய்ப்புள்ளது.

எனவே, முகத்துக்கு எப்போதுமே மாய்ஸ்ச்சரைசர் கிரீம் மட்டும்தான் ஒரே தீர்வு.

உங்கள் ஸ்கின் 'ஆயிலி ஸ்கின்' ஆக இருந்தாலும் சரி, 'வறண்ட சருமமாக' இருந்தாலும் சரி, நீங்கள் 'வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ச்சரைசர் கிரீம் பயன்படுத்துவதுதான் சிறந்தது.

இது, முகத்தின் ஈரப்பதத்தை நாள் முழுவதும் தக்க வைக்க உதவும்.