90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான இலந்தை பழத்தின் பயன்களை அறிவோமா ?

மர வகையை சேர்ந்தது இலந்தை. கிளைகள் முட்கள் நிறைந்தது. வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில், 9 மீட்டர் உயரம் வரை வளரும்.

சிவப்பு நிறத்தில் பளபளப்பாக உள்ள இலந்தைப்பழம், இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் துளிர் இலை, பழம், பட்டை என அனைத்து பாகங்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்க கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள்ளுறுப்பு புண்ணை குணப்படுத்தும்.

இலந்தை பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

கால்சியம், பாஸ்பரஸ், மக்னீஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பிளவனாய்டு, பீனால், சப்போனின் போன்ற சத்துக்களும் அதிகம். இவை சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படும்.

இலந்தை பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதி பெறும். ரத்த அழுத்தம் சீராகும். கெட்ட கொழுப்பு குறையும். நன்றாக பசிக்கும்.

முகத்தில் சுருக்கங்கள் நீங்கும். இளமை தோற்றம் கிடைக்கும்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இதை சாப்பிடலாம். உடலில் நீர்சத்து இழப்பை சரி செய்யும். ஞாபக சக்தியை தரும்.

சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இதன் பங்களிப்பு அதிகமாக உள்ளது.