அழுவது ஏன் ஆரோக்கியமானது தெரியுமா?

அழுவது ஒரு ஆரோக்கியமான, இயல்பான, மனித செயல்பாடாகும். இது வலியைக் குறைக்கவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

அழுகை பல்வேறு வகைகளாகப் பிரிப்பதோடு, அவற்றின் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.

அடித்தளக் கண்ணீர் என்பது கண்களை அழகாக, ஈரப்பதமாக வைத்திருக்கும் அடிப்படைக் கண்ணீராகும். இதில், லைசோசைம் என்ற திரவம் உள்ளது; வலுவான ஆன்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது.

அனிச்சை கண்ணீர்... நீங்கள் வெங்காயத்தை வெட்டும்போது அல்லது உங்கள் கண்களில் ஏதாவது தூசி உள்ளிட்டவை படும் போது ஏற்படும் எரிச்சல்களின் எதிர்வினையால் ஏற்படும்.

உணர்ச்சி கண்ணீர்... இது உடலில் அமைதியான, வலி நிவாரணி விளைவைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, கார்டிசோலின் அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை கொண்டுள்ளது.

ஆரோக்கியமான நரம்புகள்... அழுகை மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்க உதவுகிறது. இதனால் இனிமையான தருணத்தைத் தோற்றுவிப்பதுடன், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

வலி... அழுகை வலிக்கு உடலின் இயல்பான எதிர்வினையாகும். அழுகையின் போது எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடாஸின் வெளியிடுவதன் மூலம் வலியைக் குறைக்க உதவுகிறது.

பார்வை... நாம் இமைக்கும் ஒவ்வொரு முறையும் உருவாகும் அடித்தளக் கண்ணீர், கண்களை ஈரமாக வைத்திருப்பதற்கும், சளி சவ்வுகளைப் பாதுகாப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

மன அழுத்தம்... அழுகை என்பது மன அழுத்த ஹார்மோன்களில் இருந்து நிவாரணம் பெற உடலின் ஒரு வழியாகும். இது ஒரு நல்ல அழுகைக்குப் பிறகு மன அழுத்தத்தைக் குறைக்கும்.