உங்கள் சமையல் வேலையை ஈஸியாக்க டிப்ஸ் டிப்ஸ்...

 கோதுமை மற்றும் அரிசியில் பூச்சி வராமலிருக்க, அவை வைக்கும் டப்பாவின் அடியில் வேப்ப இலை, கல் உப்பு சேர்த்து பொட்டலம் கட்டிப் போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது

வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, முதல் நாள் இரவே பிரிஜ்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கினால், கண்ணீர் வராது; தோலும் சுலபமாக உரிக்க வரும்

குக்கரில் சாதம் செய்யும் போது, அடியில் கட்டி கட்டியாக ஆகிவிடும்.

சாதம் தயாரானதும், குக்கரிலிருந்து, 'ஹாட் பேக்'கில் எடுத்து வைத்து விட்டால், சாதம் பொல பொலவென்று உதிர் உதிராக இருக்கும்.

பூண்டு அதிக அளவில் உரிப்பது கஷ்டம். அதற்கு அடுப்பில் வாணலியை வைத்து, காய வைக்கவும்.

பின் உரிக்க வேண்டிய பூண்டை அதில் போட்டால், படபடவென்று வெடித்து தோல் எல்லாம் சிதறும். பிறகு பூண்டை உரிப்பது சுலபம்

சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால், ஒரு மாதம் ஆனாலும் முளை வராமலும், கெடாமலும் இருக்கும்

சமையலறை அலமாரி, பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், பிளாஸ்டிக் மற்றும் சம்படங்களின் மேல், எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருக்கும்.

இவற்றை போக்க , சிறிது சமையல் சோடாவுடன் தண்ணீர் கலந்து, பஞ்சு அல்லது துணியால் துடைத்தால், பிசுக்கு அகன்று பளிச்சென்று ஆகிவிடும்.