முருங்கை இலை கஞ்சி, இரும்புச் சத்து மிகுந்த எளிமையான ஒரு உணவு. காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

வாரத்தில் இரு முறை எடுத்துக்கொண்டால் இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். எலும்புகளும் வலுபெறும்.

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப், முருங்கை கீரை - 50 கிராம்

பாசிப்பருப்பு ஒரு கை அளவு, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, வெந்தயம் - சிறிதளவு

மிளகு பொடி, சீரக பொடி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, அரை வேக்காடாக்கவும்.

அதனுடன், முருங்கை கீரை, வெந்தயம், சீரக பொடி, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, மிளகு பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சுவை மிக்க, 'முருங்கைக்கீரை கஞ்சி!' தயார். சத்துகள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.