அலைபாயும் மனதை கட்டுப்படுத்த இதோ டிப்ஸ்

மன சிதறல் என்பது ஒரு குறிப்பிட்ட செயல்களில் கவனம் செலுத்த முடியாமலிருப்பது.

இதில் முக்கியமான விஷயம் என்பது எந்த மாதிரியான எண்ணங்கள் உங்களை திசை திருப்புகின்றன என கவனிக்க வேண்டும்.

அந்த சிந்தனைகள் ஒவ்வொன்றாக வராமல் இருக்க தினசரி வாழ்க்கையை சீராக திட்டமிட்டு அந்த பணிகளை செய்வதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

தியானம், யோகா போன்றவை உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

இதை ஒரு கட்டாய பயிற்சியாக செய்தால் உங்களிடம் மாற்றம் ஏற்படும்.