நவராத்திரி ஆரம்பம்... கொலுப்படி அலங்காரம்!
முதல் படி: ஓரறிவுள்ள உயிரினங்களாக வைத்து செடி, கொடி, மரங்கள், பூங்கா தோட்டம் அமையுங்கள்.
இரண்டாம் படி: இரண்டறிவு உள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த அட்டை, நத்தை, சங்கு உள்ளிட்டவை வைக்கவும்.
மூன்றாம் படி: மூன்றறிவுள்ள கரையான், எறும்பு ஆகியவற்றை வைக்கவும்.
நான்காம் படி: நான்கறிவுள்ள உயிரினங்களான வண்டுகள், பறவைகளை வைக்கவும்.
ஐந்தாம் படி: பசு, காமதேனு, நாய், பூனை உள்ளிட்டவற்றை வைக்கவும்.
ஆறாம் படி: ஆறறிவுள்ள, சிறந்த, மக்களால் பாராட்டப்பட்ட மனிதர்களின் பொம்மைகள்.
ஏழாம் படி: மகான்கள், ஞானியர்களை வையுங்கள்.
எட்டாம் படி: தெய்வ ரூபங்களான விஷ்ணு, லஷ்மி, சிவன், தசாவதார பொம்மைகளை வைக்கவும்.
ஒன்பதாம் படி: அம்பாள் பொம்மையுடன், வாழ்க்கையின் பூரணத்துவத்தை விளக்கும் பூரண கும்பத்தையும் வைக்கவும்.
இவற்றுக்கு ஒன்பது தினங்களும் ஆரத்தி எடுத்து, வீட்டிற்கு வரும் சுமங்கலிகளை பாடச் சொல்லி, சுண்டல் பிரசாதம், தாம்பூலத்தை குங்குமத்துடன் தரவேண்டும்.