இன்று பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்!
போர் சூழலில் பாலியல் வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஜூன் 19ல் போர்களில் பாலியல் வன்கொடுமையை ஒழிக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போர் உள்ளிட்ட சூழல்களில் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு போர்க்குற்றம்.
இது மனித குலத்திற்கு எதிரானது, மேலும் சர்வதேச சட்டத்தின் கீழ் இன படுகொலையின் ஒரு அங்கமாகும்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின், பெரிய போர், சண்டையை உலகம் தற்போது சந்தித்து உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் 11.70 லட்சம் பேர் வீடுகளை இழந்து உள்ளனர்.
இதில் ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீனம் மற்றும் ஈரான், சூடான், சிரியா உள்நாட்டு போர் உள்ளிட்டவை அடங்கும்.
உலகளவில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பெண், தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உடல் அல்லது பாலியல் நெருக்கமான துணை வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு, மேலும் அவர்களுக்கு சமூகத்தில் சமத்துவம், வளர்ச்சி, அமைதி ஆகியவற்றை அளிக்க இத்தினம் வலியுறுத்துகிறது.