இன்று... உலக பாரம்பரிய தினம் !
உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.,18ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்க, 'யுனெஸ்கோ' அறிவித்துள்ளது.
நம் முன்னோர் விட்டுச் சென்ற பொருட்களும், இடங்களும் தான், நம் பாரம்பரியச் சொத்துக்கள்.
அதில், கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், இஸ்லாமிய, கிறிஸ்துவ வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை வருகின்றன. இவற்றை தொல்லியல் துறையினர் பாதுகாக்கின்றனர்.
மாமல்லபுரம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மதுரை உட்பட பல கோவில்களை கண்டு வெளிநாட்டவர் வியக்கின்றனர். அவற்றின் கலையழகு, சிற்பங்கள் போன்றவை பாரம்பரிய சொத்துக்களாகும்.
அங்குள்ள கல்வெட்டுகள், பண்டைய காலத்தின் கிராம நிர்வாகம், நீதி, தேர்தல், வேளாண்மை, நில அமைப்பு போன்றவற்றை கூறுகின்றன.
செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காசுகள் உள்ளிட்டவையும், பாரம்பரிய வரலாற்றை சொல்கின்றன. கோவில், அரண்மனை, சிலைகளின் மீது கிறுக்கக் கூடாது.
தற்போது, கீழடி, ஆதிச்சநல்லுார் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களும், நம் பாரம்பரிய பெருமைகளை எடுத்துச் சொல்கின்றன.
பாரம்பரிய பெருமைகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.