தற்கொலை எண்ணம் மனநோயின் அறிகுறியா?

தற்கொலை எண்ணம் வருவதே மனநோயின் வெளிப்பாடு தான்.

மன அழுத்தம், பிரச்னைகளை கண்டு அச்சம், பதட்டம், எதிர்காலம் குறித்த பயம், இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள் தீவிரமாகும் போது மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை எண்ணம் வருகிறது.

ஒருவர் 30 வயதிற்குள் வீடு, கார் போன்றவை வாங்கியே ஆக வேண்டும் என்பது அடிப்படை தேவைகளாகி விட்டன.

மன நிம்மதி, மகிழ்ச்சி என்பது பொருட்கள் சார்ந்ததாக ஆகி, பிறரை ஒப்பிட்டு பார்த்து, நாம் நினைபதை அடைய முடியாவிட்டால் தோல்வி என நினைப்பு வரும். இது தற்கொலையை துாண்டும் முக்கிய காரணி.

மது பழக்கம் இருந்தால் தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது.