இன்று உலக சாக்லேட் தினம்

குழந்தைகள் மட்டுமல்லாமல் பலருக்கும் பிடித்தமானது 'சாக்லேட்'.

மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சாக்லேட் பரிமாறப்படுகிறது.

உடல் நிலையைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் தன்மை சாக்லேடிற்கு உண்டு

அதை போற்றும் விதமாக உலகில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஜூலை 7ல் உலக சாக்லேட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

முதன்முதலில் 1550ல் ஐரோப்பாவில் சாக்லெட் அறிமுகமானது.

'கோகோ' மர கொட்டையின் விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை சர்க்கரை, பால், பல இடு பொருட்களுடன் சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

இதில் பல வகைகள் உள்ளன. உலகில் கோகோ உற்பத்தியில் ஆப்ரிக்கா (30 சதவிகிதம்) முன்னணியில் உள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து போன்ற நாடுகள் அதிக சாக்லேட் ஏற்றுமதி செய்கின்றன.