இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம்

உலகளவில் ஐ.நா., சார்பில் ஜூன் 23ல் சர்வதேச ஒலிம்பிக் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776 - 393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடை செய்யப்பட்டது.

இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது.

இதனை ஒருங்கிணைத்தவர், பியரிடி கூபர்டின். இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இதையடுத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு வகை விளையாட்டுகள் உள்ளன.