இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் ஆண்டுக்கு 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 2040ல் இரு மடங்காக அதிகரிக்கும்.

இதில் பாதி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுபவை. இதில் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு ஏரி, ஆறு, கடலில் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை சேர்கிறது. இதனால் பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது.

இந்த உலகம், 516 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் என எச்சரித்துள்ள ஐ.நா., 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என்ற மையக் கருத்தை, இந்தாண்டு முன் வைத்தது.

இயற்கையை இனிதாகப் பேணுவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.