இன்று உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தினம்

ஆண்டுதோறும் நவ. 24ல் உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, 2024 முதல் இந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், சிகிச்சை, பராமரிப்பு, நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும் இத்தினம் உதவும்.

உலகில் 50 ஆயிரம் பிறப்புகளில் ஒன்று அல்லது ஒரு லட்சத்தில் ஒன்று என்ற விகிதத்தில் இவர்கள் இருக்கின்றனர்.

இதில் பிறக்கும் போதே இறப்பது 60 சதவீதமாக உள்ளது.

இதற்கு தாயின் வயது, இனம், சமத்துவம், பரம்பரை என எதுவும் தொடர்பில்லை.

இருப்பினும் இரட்டையர்கள் பிறப்பு, அவற்றின் அரிதான நிலை மற்றும் அவர்களுக்கு சமூகத்தில் உள்ள முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.