தாவர கொழுப்பே சிறந்தது... ஆய்வில் தகவல்!
நம் உடலுக்குத் தேவையான சத்துகளுள் ஒன்று கொழுப்புசத்து. உடலில் இது அதிகமானால் இதயக் கோளாறு தொடங்கி புற்றுநோய் வரை பல நோய்கள் ஏற்படும்.
கொழுப்புக்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு குறித்து நீண்டகாலமாக ஆய்வுகள் நடக்கின்றன.
உடலில் இயற்கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் நேட்சுரல் கில்லர்ஸ் உள்ளிட்ட சில செல்களை அதிகக் கொழுப்பு அழிப்பதால், புற்றுநோய் வேகமெடுப்பத்தாக முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.
கொழுப்பின் அளவை விடக் கொழுப்பின் தன்மை தான் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவிலுள்ள பிரின்செஸ்டன் பல்கலை புற்றுநோய் மைய ஆய்வாளர்கள் எலிகள் மீது மேற்கொண்ட ஆய்வில், தேங்காய், ஆலிவ், வெண்ணெய் போன்ற கொழுப்புகள் அளிக்கப்பட்டன.
விலங்குக் கொழுப்புகள் புற்றுநோய் எதிர்ப்புச் செல்களின் மைடோகாண்ட்ரியாவைத் தாக்கி அந்தச் செல்களைச் சிதைத்ததால், விலங்குக் கொழுப்பு உண்ட எலிகள் உடலில் புற்றுச் செல்கள் பெருகியிருந்தன.
மாறாகத் தாவரக் கொழுப்பை உண்ட எலிகள் உடலில் நோய் எதிர்ப்புச் செல்கள் நன்றாக இயங்கிப் புற்றுநோய் செல்களை அழித்தன.
இதேபோல் மனித உடலிலுள்ள நேட்சுரல் கில்லர்ஸ் செல்களை மட்டும் தனியாக எடுத்து இருவேறு கொழுப்புகளைச் செலுத்தி ஆய்வாளர்கள் சோதித்ததில், மேற்கண்ட முடிவே வந்தது.
எனவே, விலங்குக் கொழுப்புகளை விடத் தாவரக் கொழுப்புகள் ஆபத்து குறைவானவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.