மிக அவசியமானது புரதச்சத்து!
புரதங்கள் வாழ்வதற்கு அவசியம். இவை செல்லினுள் நொதிகளாக இருப்பதால் உடலின் அனைத்து செல்களுக்கும் முக்கியமானது. தண்ணீருக்குப் பிறகு, உடலில் மிகுதியாக இருக்கும் பொருளாகும்.
இவை அமினோ அமிலங்கள் எனும் சிறிய பொருட்களால் ஆன, நீண்ட சங்கிலி போன்ற மூலக்கூறுகள். இவை பெப்டைட் எனும் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
இவை நம் உடலிலுள்ள திசுக்களை வளர்க்கவும், பராமரிக்கவும், மாற்றவும் செய்கின்றன. எனவே நமது தசைகள், உறுப்புகள், நோயெதிர்ப்பு அமைப்புகள் பெரும்பாலும் புரதத்தால் ஆனவை.
புரதம் ஜீரணிக்கப்பட்டவுடன், அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலங்கள் தசைகள், எலும்புகள், ரத்தம், உடல் உறுப்புகளைப் பராமரிக்கப் பயன்படுகிறது.
அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது உடலுக்கு ஆபத்தானது. இது கல்லீரல், சிறுநீரகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல் எடையையும் கூட்டும்.
இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள், முட்டை, சோயா ஆகியவற்றில் முழுமையான புரதங்கள் உள்ளன. முழுமையற்ற புரதங்களில் விதைகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கும்.
சில உணவுகளிலுள்ள புரதங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஏனெனில் புரதத்தின் அமைப்பு நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஓர் எதிர்வினையை உண்டாக்கும்.
முட்டையின் புரதமே மிக உயர் தரமான புரதம் என கூறுகின்றனர் விஞ்ஞானிகள். சில சாதாரண புரத உணவுகளை விட அதிக அளவு பூச்சிகளில் உள்ளன. எதிர்காலத்தில் இதுவே புரதத் தேவையைத் தீர்க்கும்.