பிளவுபட்ட நாக்கு வர காரணம் என்ன?
பிளவுபட்ட நாக்கு என்பது நாக்கின் மேல் மேற்பரப்பில் பள்ளங்கள் இருப்பது போன்ற அமைப்பை குறிக்கும்.
இது பெரும்பாலும் மையத்திலிருந்து ஒரு கதிர்வீச்சு போல் இருக்கும்.
இது புவியியல் நாக்கு, மெல்கர்சன்-ரோசென்டல் நோய்க்குறி (பிளவுபட்ட நாக்கு, முக வாதம் மற்றும் உதட்டு அழற்சி), டவுன் சிண்ட்ரோம் போன்ற காரணங்களால் வரக்கூடும்.
மேலும் சொரியாசிஸ், வைட்டமின் பி குறைபாடுகளால் ஏற்படுகிறது.
இது பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை. இதற்கு நாக்கினை மென்மையாக சுத்தம் செய்து பராமரித்து போதுமான நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும்.
கிருமிநாசினியுடன் கூடிய வாய் கொப்பளிப்பான்களை பயன்படுத்த வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்தல் மூலம் இதனை குணப்படுத்தலாம்.