செப். 1-7 தேசிய ஊட்டச்சத்து வாரம்!

இந்தியாவில் ஏற்படும் 56.4 சதவீதம் நோய்களுக்கு ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் தான் காரணம் என ஆய்வு கூறுகிறது.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது போல நலமுடன் இருப்பதற்கு இயற்கையான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

ஆரோக்கியமான உடல்நலனுக்கு ஊட்டச்சத்து மிக அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து நமது மூளை, உடலமைப்பு மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், கொழுப்புகள், நீர் மற்றும் கார்போஹைட்ரேட் இன்றியமையாததாக இருக்கிறது

இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1982 முதல் மத்திய அரசு சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரம் (செப். 1 - 7) கடை பிடிக்கப்படுகிறது.

சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் இவ்வாரம் உதவுகிறது

உணவில் பழங்கள், காய்கறி, புரதம், இறைச்சி என அனைத்து வித சத்துகளும் சமச்சீரான அளவில் இடம் பெறவேண்டும்.

குறிப்பாக பாரம்பரிய இயற்கை உணவில் கவனம் செலுத்துவது நம் ஆரோக்கியதின் மேன்மைக்கு மிகவும் நல்லது.