நம்மிடமே இருக்கு மருந்து - சுண்டைக்காய்! உடலிலுள்ள கிருமிகளை அழித்து, கொழுப்பை கரைக்கிறது.

புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டு வலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய், சிறந்த மருந்து.

100 கிராம் சுண்டைக்காயில், இரும்பு சத்து - 22.5 மி.கி., கால்சியம் - 390 மி.கி., பாஸ்பரஸ் - 180 மி.கி., அடங்கியுள்ளது.

ஆஸ்துமா, வறட்டு இருமல், காசநோய் கோளாறு உள்ளவர்கள், தினமும், 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணையில் வறுத்து சாப்பிட்டு வந்தால், நோய் கட்டுப்படும்.

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலப்படும்; பெண்களுக்கு நல்லது.

நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுப்பதுடன், பார்வைத் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் செய்கிறது.

சுண்டைக்காயை மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்படும்.

இதில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.