வண்ணத்து பூச்சி... கால்களால் சுவைக்கும் உயிரினம் இது!
வண்ணத்து பூச்சிகள் நம்மை போல் இல்லாமல் சுவையை உணர, தனது கால்களை பயன்படுத்துகின்றன.
இவற்றுக்கு வாய் கிடையாது. இதற்கு பதிலாக பிரத்யேக உறிஞ்சு குழல் உள்ளது.
ஆனால், இதற்கு சுவை அறியும் தன்மை கிடையாது.
உலகில் 15 ஆயிரம், இந்தியாவில் 11, ஆயிரம் வகை வண்ணத்து பூச்சிகள் உள்ளன.
நான்கு செதில் இறக்கைகளை கொண்டது. இதன் பல வண்ண நிறங்கள் நம்மை ஈர்க்கின்றன.
செடிக்கு செடி தாவி, பூவிலுள்ள தேனை உறிஞ்சும் இவை, குளுமையான, ஈரப்பதமுள்ள இடங்களில் வாழும்.
பருவநிலை மாற்றத்தால் பல வகைகள் அழிவை சந்தித்துள்ளன.