வாய் புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

வாய் புண் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

ஆனால், இரண்டு வாரத்துக்கு மேல் இருந்தால், புற்றுநோயாக மாற வாய்ப்புண்டு.

4, 5 நாட்கள் இருந்தாலே டாக்டரை சந்திக்க வேண்டும்.

புகையிலை, பான் போன்ற பழக்கம், பல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

வெள்ளை நிறத்தில், சிவந்த நிறத்தில் புண் ஏற்படுவது, வாய் இறுக்கு நோய் போன்றவை புற்றுநோய்க்கு முந்தைய நிலை.

தொடர்ந்து பயன்படுத்தும் போது, புற்றுநோயாக மாற வாய்ப்புண்டு என்பதால் புகையிலை பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.