இன்று பரிணாம தத்துவத்தை உலகிற்கு தந்த சார்லஸ் டார்வின் தினம்!

அறிவியல் துறைக்கு சார்லஸ் டார்வினின் பங்களிப்பை கவுரவிக்கவும், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும் அவரின் பிறந்தநாள் (பிப். 12) 'டார்வின் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.

167 நாடுகளின் 400 விஞ்ஞானிகள் 1909ல் லண்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் சந்தித்தபோது, இத்தினம் உருவாக்கப்பட்டது.

1809 பிப். 12ல் பிரிட்டனில் பிறந்தார். தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை 1859ல் 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நுாலாக வெளியிட்டார்.

'குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவானான்' என்பதை உலகிற்கு தெரிவித்தார்.

1997 முதல், நியூயார்க் நகர கல்லூரியின் பேராசிரியர் மாசிமோ பிக்லியூசி பிப்ரவரி 12 ஆம் தேதியை டார்வின் தினமாகக் கொண்டாடத் துவங்கினர்.

எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும். - டார்வின்

மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர். - டார்வின்