ரூ.50 ஆயிரத்தை தொட்டது ஒரு சவரன் தங்கம் விலை!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
இதனால், ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,250ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ரூ.50,000த்தை தொடுவது இதுவே முதன்முறையாகும்.
உலக நாடுகளுக்கு இடையிலான போர்கள், நாடாளுமன்றத் தேர்தல், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள், உலக நாடுகளின் தங்கத் தேவைகள் உட்பட பல காரணங்களால் விலை உயர்வதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த விலையேற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.