இன்று உலக எய்ட்ஸ் தினம்
உலகில் 2024 கணக்கின்படி, 4.08 கோடி பேர் எய்ட்ஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர்.
இதில் 14 லட்சம் பேர் சிறுவர்கள். இதில் 13 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள். எச்.ஐ.வி., பாதிப்பால் 6.30 லட்சம் பேர் பலியாகினர்.
எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச.1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. 1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.
எச்.ஐ.வி., ஒரு வைரஸ்; அதன் முற்றிய நிலையே எய்ட்ஸ். வைரஸ் பாதித்த நாளில் இருந்தே, கட்டாயம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
'இடையூறுகளை சமாளித்தல், எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மாற்றி அமைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.