இதயத்தால் உணருங்கள்.... ஹெலன் கெல்லரின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள் !
உலகின் சிறந்த, அழகான விஷயங்களைப் பார்க்கவோ அல்லது தொடவோ கூட முடியாது; அவற்றை இதயத்தால் உணர வேண்டும்.
நம்பிக்கை என்பது சாதனைக்கு வழிவகுக்கும். நம்பிக்கை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
தனியாக நாம் மிகக் குறைவாகவே செய்ய முடியும்; ஆனால், ஒன்றாக நாம் நிறைய செய்ய முடியும்.
நாம் ஆழமாக நேசிக்கும் அனைத்தும் நம்முடைய ஒரு பகுதியாக மாறும்.
உலகில் மகிழ்ச்சி மட்டுமே இருந்தால், நாம் எப்போதும் தைரியமாகவும், பொறுமையாகவும் இருக்க கற்றுக்கொள்ள முடியாது.
வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருட்டில் ஒரு நண்பருடன் நடப்பது சிறந்தது.
மகிழ்ச்சியின் ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கும்; ஆனால் மூடிய கதவையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், திறக்கப்பட்ட கதவை நாம் பார்ப்பதில்லை.
இன்றைய தோல்விகளைப் பற்றி நினைக்காதீர்கள். அதேவேளையில், நாளை வரக்கூடிய வெற்றியைப் பற்றியும் சிந்திக்காதீர்கள்; இயல்பாக இருங்கள்.
மற்றவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்க முயற்சிக்கும் வரை நாம் எப்போதும் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டோம்.
அவசரமோ, குழப்பமோ இல்லாமல் தெளிவாக சிந்தியுங்கள்.