ஈறு நோயின் அறிகுறிகள் என்ன? தீர்வுகள் சில...
ஈறு நோய் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம், எனவே எந்த மாற்றங்களையும் கவனிப்பது அவசியம். ஈறு நோய் குணப்படுத்தக்கூடிய ஒன்று தான்.
ஆனால் சீர்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு ஆரம்பத்திலேயே கண்டறிவது முக்கியம்.
ஈறு நோய் ஏற்பட்டால் எளிதில் ரத்தம் கசியும் அல்லது மென்மையாக இருக்கும்.
ஈறுகள் சிவப்பு அல்லது வீங்கிய ஈறுகளாக காணப்படும்.
வாய் துர்நாற்றம், மெல்லும் போது வலி ஏற்படும்.
பற்களின் சீரமைப்பில் மாற்றம் ஏற்படும்.
உங்களுக்கு ஈறு நோயின் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது முக்கியம்
பல் மருத்துவர் இவற்றை சரி செய்ய கம் லிப்ட் செயல்முறையைச் செய்வார்.
சிகிச்சைக்கு பின் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.