பிரண்டை வடகம் ரெசிபி இதோ
தேவையான பொருட்கள்: பிரண்டை நறுக்கியது - 2 கப், சீரகம் - 2 டீஸ்பூன்
ஜவ்வரிசி - 500 கிராம், எலுமிச்சம் பழம் - 3, பச்சை மிளகாய்- 10, எண்ணெய், உப்பு, சமையல் சோடா, தண்ணீர் - தேவையான அளவு.
ஜவ்வரிசியை, 10 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரில் காய்ச்சவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானவுடன் சீரகம், ப.மிளகாய், பிரண்டையை வதக்கவும். ஆறியதும் அரைத்து, காய்ச்சிய ஜவ்வரிசியுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
பின், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, சமையல் சோடா சேர்த்து கிளறி ஆறவிடவும்.
வெயிலில் சுத்தமான பருத்தி துணியை விரித்து ஆறிய கலவையை சிறிது சிறிதாக ஊற்றி காய வைக்கவும்.
இப்போது ஆரோக்கியமான பிரண்டை வடகம் ரெடி. எண்ணெயில் பொரித்து மதிய உணவுடன் சாப்பிட சுவை அள்ளும்.