ஏன் கொலோனோஸ்கோபி பரிசோதனை அவசியம்?
சாப்பிடும் உணவிலுள்ள சத்துக்களை சிறுகுடல் உறிஞ்சிய பின், சக்கையை பெருங்குடலுக்கு தள்ளும். அதிலிருக்கும் நீரை உறிஞ்சி, தேவையற்ற கழிவுகளை பெருங்குடல் வெளியே தள்ளி விடும்.
தொடர்ந்து அதிகமாக பெருங்குடல் வேலை செய்வதால், அதன் உள்பகுதியிலுள்ள தோல் போன்ற 5 செல்கள், 48 மணி நேரத்திற்கு ஒரு முறை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்.
இடைவிடாது வேலை நடக்குமிடத்தில் தவறு நடப்பது இயல்பு. செல் புதுப்பித்தல் நடப்பதால், ஏதாவது ஒரு செல் தவறாக வளர்ந்து, பெருகி கட்டியாக மாறுவது தான் கேன்சர்.
துவக்க நிலையிலேயே கண்டுபிடித்து அகற்றினால் பிரச்னை வராது. வளர விட்டால் பெருங்குடல் கேன்சராக மாறி உயிருக்கே ஆபத்தாக முடியும்.
மேற்கத்திய நாடுகளில் 45 வயதில் வரும் கேன்சர் உட்பட பல நோய்கள், நம் நாட்டில் 35 வயதிலேயே வருகின்றன.
மலக்குடல் கேன்சரால், 25 வயதிலேயே உயிரிழப்பவர்களை பார்க்கிறோம். சிறிய வயது தானே, எதுவும் வராது என்று அலட்சியமாக இருப்பது கூடாது.
ரத்த சொந்தத்தில் 40 வயதில் கேன்சர் இருந்தால், அடுத்த தலைமுறை 30 வயதிலேயே பரிசோதிப்பது அவசியம்.
ஒரு முறை கொலோனோஸ்கோபி பரிசோதனையில் கேன்சர் இல்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேன்சர் வராது. குறிப்பிட்ட இடைவெளியில் இப்பரிசோதனை செய்வது நல்லது.