இந்தியாவில் இயற்கை அதிசயங்கள் நிரம்பிய 7 சுற்றுலா தலங்கள்...!

உயிருள்ள வேர்ப்பாலம்... மேகாலயாவிலுள்ள சில மரங்கள் 500 ஆண்டுகள் பழமையானவை. அங்கு உயிருள்ள மரங்களின் வேர்கள் இணைந்து இயற்கையான பாலத்தை ஏற்படுத்தி இருக்கும்.

மஹாராஷ்டிரா, பல்தானா மாவட்டத்தில் லோனார் லேக் அமைந்துள்ளது. 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததால், உருவான ஏரி, வட்டவடிவில் காணப்படுகிறது.

காஷ்மீர் அடுத்த லே பகுதியிலுள்ள மேக்னடிக் ஹில்லில், வாகனத்தை பார்க் செய்யும் பொழுது, இன்ஜினை ஆப் செய்திருந்தாலும், நியூட்ரலில் இருந்தாலும், புவி ஈர்ப்பு விசை காரணமாக மேடான பகுதியை நோக்கி செல்லும்.

மணிப்பூரில் உள்ள லோக்டாக் ஏரி, வட்டம், சதுரம் என பல மிதக்கும் தீவு கூட்டங்களுக்கு பெயர் பெற்றது. 240 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள இது, தெற்காசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாக திகழ்கிறது.

மபி., ஜபல்பூரிலுள்ள மார்பிள் பள்ளத்தாக்கில் பிரமாண்ட பாறைகளுக்கு இடையே, நர்மதா நதி 3 கி.மீ தூரத்துக்கு பயணிக்கிறது. இரவில் மின்னும் விளக்கொளியில் படகில் பயணிப்பது, சிலிர்ப்பான அனுபவத்தை தரும்.

அலேயா கோஸ்ட் லைட்ஸ்... மேற்கு வங்கம் சுந்தர்பன்ஸ் சதுப்பு நில காடுகளில் இயற்கையாக, மின்னும் வித்தியாசமான ஒளி தென்படுகிறது. இரவில் பேய்கள் நடமாடுவதால் இதுபோன்று தெரிவதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

குஜராத், கட்ச் பகுதியிலுள்ள உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனம், இயற்கையாகவே விசித்திரமான இடமாகும். பருவமழை சீசனில் ஏரியாக காட்சி தரும் களிமண் பிரதேசம், கோடையில் உப்பு பாலைவனமாக மாறிவிடும்.