அப்பார்ட்மென்ட் வீடு வாங்கப்போறீங்களா?'… யு.டி.எஸ்., பற்றி தெரிஞ்சுக்கோங்க…
அடுக்குமாடி திட்டத்தில் நான் வாங்கும் வீட்டுக்கு என் பெயரில் பட்டா கிடைக்குமா என்பது தொடர்பாகவும் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, அடுக்குமாடி திட்டங்களில் ஒரு நிலம் எல்லை வரையறை இன்றி, அதில் வீடு வாங்கும் அனைவருக்காகவும் பங்கிடப்படுகிறது.
இது நிலத்தின் பிரிபடாத பங்கு அதாவது யு.டி.எஸ்., என்று குறிப்பிடப்பட்டு வீடு வாங்குவோர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.
யு.டி.எஸ்., பாகத்தின் அளவு அடிப்படையில் கூட்டு பட்டா வழங்க வாய்ப்பு உள்ளது என்பதை வீடு வாங்கும் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது வீட்டின் அளவு மட்டுமின்றி, அதில் உங்களுக்கான யு.டி.எஸ்., பாக அளவு என்ன, என்பது தொடர்பாக விபரங்களை தெளிவாக விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக, அத்திட்டத்தில் மொத்தம் உள்ள வீடுகள் எண்ணிக்கை என்ன, யு.டி.எஸ்., பங்குகள் எண்ணிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
வீடுகளின் எண்ணிக்கையை காட்டிலும் கூடுதலாக யாருக்காவது யு.டி.எஸ்., பங்கு அளிக்கப்பட்டு இருந்தால் அதில் ஏதோ குளறுபடி இருக்கிறது என்பதை புரிந்து 'அலர்ட்' ஆவது நல்லது.
வீடுகளை விட கூடுதல் எண்ணிக்கையில் யு.டி.எஸ்., பாகம் பிரிக்கப்பட்டு இருந்தால் அதில் பிற்காலத்தில் தேவையில்லாத பல்வேறு புதிய பிரச்னைகள் வரும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
வீட்டின் பரப்பளவில், 50 அல்லது, 40 சதவீதமாக யு.டி.எஸ்., பங்கு இருக்க வேண்டும், குறைவாக இருந்தால் பிற்காலத்தில் வீட்டை விற்கும் போது பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.