இன்று உலக புகைப்பட தினம்!

புகைப்படக் கலை தொடக்கத்தில் இருந்து, மனிதர்களின் நினைவுகள், வரலாறு, கலாச்சாரம், மற்றும் உணர்ச்சிகளைப் பதிவு செய்யும் சக்திவாய்ந்த கருவியாக இருந்து வருகிறது.

19ம் நுாற்றாண்டில் லுாகிஸ் டாகுரே 'டாகுரியோடைப்' எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார்.

இதை 1839 ஆக. 19ல் பிரான்ஸ் அரசு உலகிற்கு அறிவித்தது. இதன்படி ஆக.19ல் உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புகைப்படம் எடுப்பது ஒரு 'கலை'. ஒரு காட்சியை நிலை நிறுத்தி காலம் கடந்தும், நம் நினைவுகளை அசைப்போட உதவும்.

வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம்.

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் உலகம் முழுவதும், உலக புகைப்பட நாள் கொண்டாடப்படுகிறது

புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன.

பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு, 'வேர்ல்டு பிரஸ் போட்டோ', 'டைம்' இதழ் மற்றும் 'புலிட்சர் விருது'கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.