இன்று உலக நாய்கள் தினம்!

வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு முக்கிய இடம் உண்டு. தன்னை வளர்ப்பவருக்கு விசுவாசமாக இருக்கும்.

இது ஐந்தறிவு உயிரினம் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும்.

வீட்டுக்கு காவலாக இருக்கும் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஆக.26ல் உலக நாய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற பலவகை நாட்டு நாய்கள் உள்ளன.

தற்போது பல ரக வெளிநாட்டு வகை நாய்களும் வீடுகளில் ஆசையாக வளர்க்கப்படுகிறது.

ரேபிஸ் நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதால் நாய் வளர்ப்பவர்கள், அதற்கு தடுப்பூசி உள்பட முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம்.

நாய்கள் நமக்கு விசுவாசத்தை மட்டுமல்ல மகிழ்ச்சியையும், அன்பையும் தருவதால் அவற்றை கொண்டாடுவோம்