இன்று உலக ஏரிகள் தினம்
ஆண்டுதோறும் ஆக. 27ல் உலக ஏரிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது
பூமியில் 11.70 கோடி ஏரிகள் உள்ளன. இவை மொத்த நிலப்பரப்பில் 4 சதவீதமாக உள்ளது.
பெரும்பாலான நன்னீர், பனி மலைகளிலும், நிலத்தடியிலும் உள்ளது.
இதனால் மேற்பரப்பு நன்னீரில் 90 சதவீதத்தை ஏரிகள் கொண்டுள்ளன. இவை குடிநீர் விவசாயம், தொழில்துறைக்கு பயன்படுகிறது.
மேலும் மீன்கள், தாவரங்கள், வனவிலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது.
வெள்ளநீர், கார்பனை உறிஞ்சி பூமியை குளிர்ச்சியாக வைத்திருப்பதால், காலநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஏரிகளை பாதுகாக்க கோரி ஐ.நா., சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.