அற்புதங்கள் செய்யும் அருகம்புல் சாறு!! நன்மைகள் அறிவோமா!!
அருகம்புல்லில் உப்புச்சத்து, நீர்த்த கரிச்சத்து, அசிட்டிக் அமிலம், நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், டைட்டர் பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் 'சி' சத்தும் அடங்கியுள்ளன.
அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டுகள், வேர் என அனைத்துமே மருத்துவப் பயன்கள் கொண்டவை.
சிறுநீரகக் கோளாறுகள், தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்றுநோய்கள், உடற் சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்படுத்தல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களையும் போக்கும்.
ரத்தத்தை சுத்திகரிக்கும், உடலில் உள்ள தேவையில்லாத நச்சுகளை வெளியேற்றும். தவிர, புற்றுநோய் குணப்படுத்தும் தன்மை உடையது.
வயிற்றுப்போக்கை குணப்படுத்துவது, குமட்டல், வாந்தியை தனித்தல், ஆபத்து விளைவிக்கும் நுண் கிருமிகளை தடுத்தல், என வயிற்று ஆரோக்கியதிற்கு ஏற்றது.
மாரடைப்பை தடுக்க உதவும். ரத்தத்தில் பிராணவாயுவை அதிகரிக்கும். இதில் அடங்கியுள்ள மேனிட்டால், சேப்போனின்ஸ் சத்துகள் சிறுநீரை பெருக்க உதவுகின்றன.
தினசரி அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருகம்புல்லை சாறாக்கி குடிக்கலாம். ரத்தத்தில் எளிதாக கலந்து நல்ல பலன் தரும்.
நாட்டு வெல்லம் சேர்த்தும், கரும்புச்சாறுடன் கலந்தும் அருகம்புல் சாறை அருந்தலாம்.