நம்மிடமே இருக்கு மருந்து - எள்!
இளைத்தவனுக்கு எள்ளு என்பது, முன்னோரின் வாக்கு.
உடலை தேற்றும் மருந்தாகவும், பித்தத்தை குறைக்கவும், முதன்மையாக திகழ்கிறது, எள்.
எள்ளில் உள்ள புரதம் மற்றும் போலிக் அமிலம், டி.என்.ஏ., உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வீரியமும் எள்ளுக்கு உண்டு.
சரும ஆரோக்கியத்தை காக்கவும் உதவுகிறது.
சிறுநீரை பெருக்கி, மலத்தை இளக்கச் செய்கிறது.
எள்ளை ஊற வைத்து, அந்த தண்ணீரை அருந்தி வந்தால், செரிமான கோளாறுகள் நீங்கும்.
கீரையில், பொடித்த எள் மற்றும் வேக வைத்த பூண்டு சேர்த்து சமைத்தால், கீரையின் முழு பலனையும் பெறலாம்.