பெற்றோருக்கு இதய நோய் இருந்தால் குழந்தைகளுக்கு வருமா?
பரம்பரையில் பெற்றோர்களுக்கோ, உடன்பிறந்தவர்களுக்கோ இதய நோய் இருந்தால், பிள்ளைக்கு இதய நோய் வருமா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.
ஹார்ட் அட்டாக் அல்லது இதய நோய்கள் ஏற்படுவதற்கு மன உளைச்சல், படபடப்பு, பயம் கொள்ளுதல், கோபம் உள்ளிட்ட பல விஷயங்கள் காரணங்களாகும். மன இறுக்கம் மிக முக்கிய காரணம்.
இடது கை வலி, இடது மார்பு வலி, தலைசுற்றல் ஆகியவைகள் வந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என உறுதியாக கூற முடியாது.
இதுபோன்ற அறிகுறி இருந்தால் , பதட்டம் அடையாமல் இதய நோய் சிறப்பு பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக கொழுப்பு, புகைப் பழக்கம், அளவுக்கதிகமான மது அருந்துதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தினால் இதய நோயிலிருந்து தப்பலாம்.
இதய நோய்களை தவிர்க்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தல் நலம். கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.