உணவுப்பொருட்கள் பார்சலில் பாதிப்பை உருவாக்கும் ரசாயனம்
உணவு தயாரிப்பு, பார்சல் (பேக்கேஜிங்) ஆகியவற்றில் ரசாயன பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், புற்றுநோய், நரம்பியல் வளர்ச்சி கோளாறு, கருவுறுதலில் குறைபாடு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.
அதேவேளையில், வேளாண் உற்பத்தி குறைவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உணவுப்பொருட்கள் பார்சலுக்கான பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் 'பீஸ்பீனால், தாலேட்' ரசாயனங்களால் ஹார்மோனில் பாதிப்பு உருவாகிறது.
இதன் காரணமாக 2025 - 2100ல் 20 கோடி முதல் 70 கோடி வரை குழந்தைகள் பிறப்பு குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆபத்தை விளைவிக்கும் ரசாயனப் பொருட்களின் பயன்பாட்டை கட்டாயமாக குறைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.