ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பஞ்ச தந்திரங்கள்
வாரத்தில் ஒரு நாள் பழங்கள் மற்றும் பழச்சாறு மட்டுமே அருந்தும்போது, உடலிலுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். ரத்த ஓட்டம் மேம்படும்.
தினமும் 3 - 4 லிட்., தண்ணீர் குடித்து வர உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இது உடலில் நச்சுகளை தேங்கவிடாது; சரும பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அளவுக்கதிகமான யோசனை, எதிர்காலத்தை பற்றிய பயம் மன அழுத்தம், தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டுக்கு வாய்ப்புள்ளது.
கழிவுகள் உடலில் சேர்வதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணமென இயற்கை மருத்துவம் கூறுகிறது. மலச்சிக்கல் தான் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
தினமும் 30 - 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம். நடைபயிற்சி, யோகா, பிராணயாமம் செய்யலாம்.
அதேவேளையில், முடிந்தளவு மருந்துகளை குறைத்து, உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தாலே உடல் கோளாறுகள் குறையும்.