கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில...
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மிளகாயை குறைவாக சேர்த்துக் கொள்ளலாம்.
நீர் வறட்சியை ஏற்படுத்தும் என்பதால், மதியம் காபி, டீயை தவிர்க்கலாம்.
அசைவம் மற்றும் அதிக புரத உணவுகளை கிரகிக்க, 'மெட்டபாலிசம் ரேட்' அதிகமாகும்போது உடல் அதிக சூடாகும். இதனால், நீர் வறட்சி அதிகரிக்கும். ஆதலால், அவற்றை தவிர்க்கலாம்.
சப்பாத்தி உள்ளிட்ட கோதுமை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவ்வகை உணவுகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், செரிமானக் கோளாறுகளும், மலச்சிக்கலும் ஏற்படலாம்.
சோடியம் அதிகம் கலந்திருக்கும் ஊறுகாய் நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் கோடையில் ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதும் அஜீரணத்தை உண்டாக்கும்.
உடலுக்கு தேவையான நார்ச்சத்து பழங்களில் இருந்துதான் கிடைக்கும். அதனால் பழச்சாறுகளை விட பழங்கள் மற்றும் காய்கறிகள் சிறந்த தேர்வாக அமையும்.
கோடையில் மது அருந்துவது அதிக வியர்வையை வெளிப்படுத்தும். அதனால் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும்.
பஜ்ஜி, வடை, சமோசா மற்றும் பிரெஞ்ச் பிரை போன்ற எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும் அனைத்து வகையான உணவுகளும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
சூடான உணவை சாப்பிடும்போது, சிலருக்கு வியர்வை வரும். அது மேலும், உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்தும். எனவே, சூடாக உண்பதை தவிர்க்கவும்.