ஜன.,30 காந்திஜி நினைவு நாள்: தியாகிகள் தினம்
இந்திய சுதந்திரம் பெற முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி.
இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் கூட, ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காந்தியின் நினைவு தினம் (ஜன.30) தியாகிகள்தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்.
பிறப்பினால் உயர்வு தாழ்வு கொள்வது கடவுளுக்கு எதிரானது. - காந்திஜி
தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து வைப்பது, ஒருவகையில் திருட்டு தான். - காந்திஜி