ஒலிக்குளியல் குறித்த சில புரிதல்கள்...

ஒலிக்குளியல் என்பது ஒலிகளின் ஆழமான அதிர்வுகளால் உடலையும் மனதையும் சூழ்ந்திருக்கும் ஒரு தனித்துவமான அனுபவமாகும்.

இது வெறுமனே இசையைக் கேட்பது அல்ல; இது ஒரு சிகிச்சையாகும். இதில் பங்கேற்பவர்கள் படுத்துக்கொண்ட நிலை வசதியாக ஓய்வெடுக்க வேண்டும்.

சிகிச்சை அளிப்பவர் கோங்ஸ், கிரிஸ்டல் பாடும் கிண்ணங்கள், திபெத்திய பாடும் கிண்ணங்கள் மற்றும் டியூனிங் ஃபோர்க்ஸ் போன்ற கருவிகளை இசைப்பர்.

இந்தக் கருவிகளில் இருந்து எழும் ஒலிகள் குறிப்பிட்ட அதிர்வுகளை எழுப்புகின்றன.

இந்த அதிர்வுகள் உடலின் செல்களுக்குள் ஊடுருவி, மூளையின் அலைகளை விழிப்பு நிலையில் இருந்து ஆழ்ந்த தளர்வு நிலைக்கு கொண்டு செல்கிறது.

இச்சிகிச்சை நல்ல துாக்கத்தை தரும் என கூறப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், உடல் மற்றும் மன அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைப்பதாகும்

இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. ஆழ்ந்த தளர்வு நிலையை தருவதால் உடனடியாக துாக்கம் தழுவுகிறது.

உடலில் உள்ள இறுக்கம் மற்றும் தசைப்பிடிப்புகளை விடுவித்து, ரத்த அழுத்தத்தையும் சீராக்க உதவுகிறது.

பொதுவாக, எந்த வயதினரும் இதில் பங்கேற்கலாம். முதியோருக்கும், மன அழுத்தத்தில் உள்ள எந்த வயதினருக்கும் ஏற்றது.

இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அதிக ஒலி உணர்திறன் உள்ளவர்கள் மருத்துவர் அல்லது பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இது சுமார் 2,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய திபெத்திய பௌத்த கலாச்சாரங்களில் தியானப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.