உணவு மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய வழிகள் சில!!
மாறி வரும் பருவநிலையை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய, முதலில் நம் உடலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்.
எல்லா நேரமும் அதிக மசாலா, எண்ணெய், மைதா நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், பசை போன்று குடலில் ஒட்டிக் கொள்ளும்; கழிவுகள் வெளியேறாது; தொற்று பாதிப்பை அதிகரிக்கும்.
வைட்டமின் சி நிறைந்த நெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு முடிந்த அளவு சாப்பிடலாம். இதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
பல மருந்துகள் தயாரிக்க அடிப்படை மூலப்பொருளான இதை, நேரடியாக எடுத்துக் கொண்டால் இன்னும் நல்ல பலன் தரும்.
பழம் சாப்பிட்டால் சளி அதிகரித்து, தொண்டை கரகரப்பாக உள்ளதாக சொல்வார்கள். அதிக சளி இருந்தால், இப்பழங்கள் சாப்பிட்டால் உள்ளிருக்கும் கபம் எளிதாக வெளியேறும்.
இது சளி அதிகரிப்பதைப் போன்று தோன்றும். வெந்நீரும் குடிக்கலாம். எந்தப் பருவத்திலும் இந்தப் பழங்களை சாப்பிடலாம்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுலபமான வழி, தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.