பாரம்பரிய சுவையுடன் ஹெல்த்தியான கேழ்வரகு பக்கோடா !
தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - 1 கப், பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 2, சீரகம், மல்லி கீரை, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
இஞ்சி, முருங்கைக் கீரை, கம்பு மாவு, மஞ்சள் துாள், மிளகாய் துாள், தண்ணீர் - சிறிதளவு.
பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாகவும் நறுக்கவும்.
இவற்றுடன், கேழ்வரகு மாவு, துருவிய இஞ்சி, சீரகம், முருங்கைக் கீரை, மஞ்சள் துாள், மிளகாய்துாள், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும்.
அரைமணி நேரம் ஊறிய பின், சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், 'கேழ்வரகு பக்கோடா' ரெடி.
ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்த பாரம்பரிய ராகி பக்கோடாவை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.